பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

எட்டு நாட்கள்


சூரியன் சுற்றித்திரியும் கோளம்! பூமி நிலைத்து நிற்பது என்பது அரிஸ்டாடில் அளித்த கொள்கை,

இதன்படியே, ஏடுகள், குறிப்பாக மத ஏடுகள் தீட்டப்பட்டுவிட்டன.

விண்ணுலகம், ஆங்கே விசாரணைக்கூடம்; நரகம், அங்கு வேதனைக்கூடம்; எனும் மதக்கருத்து, அசையாதிருக்கும் பூமி, அன்றாடம் சுற்றிவரும் சூரியன், என்ற அடிப்படையின்மீது கட்டப்பட்டது.

இந்த அடிப்படையைச் சந்தேகிப்பது பாவம், என்று கூறுவதில் மதவாதிகள் முனைந்தனர்: ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் இந்த அடிப்படையை அலசத் தொடங்கினர்.

ப்ரூனோ சிறுவனாக இருந்தபோதே. வெடிகுண்டு வீசப்பட்டுவிட்டது.

வேதநிந்தகன் கிளம்பீவிட்டான் !

கோபர்னிகஸ் எனும் ஆராய்ச்சியாளன், பூமி உருண்டை வடிவுடன் இருக்கிறது, அது சுற்றித்திரிகிறது. சூரியன் நிலைத்து நிற்கும் கோளம் என்று ஏடு தீட்டிவிட்டான். மதவாதிகள் பாய்வர் என்ற அச்சத்தால், கோபர்னிகஸ். அந்த ஏடு. தீட்டியும் வெளியே காட்டாது வைத்திருந்து. மரணப்படுக்கையில் இருக்கும்போதுதான் அந்த ஏட்டை வெளியிட ஏற்பாடு செய்தான். கோபர்னிகஸ் கொள்கை கேட்டு. வைதீக உலகு சீறிக்கிளம்பிற்று; இது பொய்க் கொள்கை, பேய்க்கொள்கை; பூமியாவது சுற்றுவதாவது; மேலே விண்; இங்கே மண்; இதனடியில் நரகம்; புண்யம் பாவம் இரண்டிலே எதைச் செய்யவும் மண்; புண்ணியம்