பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

எட்டு நாட்கள்


ஒரு வேளை பகைபட்டுவிட்டது போலும்--ஒரு வேளை நமது கொள்கையை ஆதரிப்போரின் தொகை இத்தாலியில் வளர்ந்துள்ளது போலும்--இல்லை என்றால் தன் மகனுக்குத் தத்துவ ஆசிரியராக இருக்கும்படி ஏன் அந்தச் சீமான் அழைக்கப்போகிறார், என்று எண்ணினாரோ என்னவோ! ஏமாந்துவிட்டார். புற்றருகே அமர இசைந்து விட்டார்.

வெனிஸ் நகர்! கடலலை தழுவும் கோட்டைச் சுவர் உள்ள அழகிய மாளிகை! ப்ரூனோ அங்கு தங்கி, தமது அருந்திறனை அள்ளி அளித்துவந்தார் சீமான் மகனுக்கு. வெள்ளியை உருக்கிவார்க்கும் நிலவு போல அவர் அறிவு புகட்டிவந்தார் வாலிபச் சீமானுக்கு--ஆனால், அவன் மனதிலே அறிவு புகவா செய்தது--அவன் முன் ஏற்பாட் டின்படி ப்ரூனோ சொன்னதை எல்லாம் மதவிசாரணைக் குழு அலுவலரிடம் ஒவ்வொருநாளும் ஒப்புவித்துக் கொண்டிருந்தான்--குற்றப்பத்திரிகை தயாராகிக் கொண்டிருக்கிறது ப்ரூனோமீது.

"அகண்ட வெளியின் அழகினைக் காண் இளைஞனே! இயற்கையின் எழிலைப் பாரப்பா! என்ன கவர்ச்சி! எவ்வளவு நேர்த்தி! வீசும் காற்று, கீதமாக இல்லையா வாலிபனே. உற்றுக் கேள் ! கடலலையைக் கண்டால் எத்துணை மாட்சிமை தெரிகிறது. இந்த இயற்கை அழகைக்கெடுக்க அழுகும் கற்பனைகளை, கட்டுக்கதைகளைக் கட்டிவைத்திருக்கிறார்களே கபடர்கள் " என்றெல்லாம். பாகுமொழியில் பகுத்தறிவைக் கூறிவந்தார் ப்ரூனோ. எப்போதுமே, ப்ரூனோவுக்கு இயற்கை அழகைக்கண்டு களிப்பதிலே அளவற்ற இன்பம். ஆண்டு பலவாக அவர், மாளிகைகளிலே சிற்சில காலம் தங்கிக் கிடந்தாலும் பெரும் பகுதி நாடு விட்டு நாடு சுற்றித்திரியும் நிலையிலே இருந்ததால், இயற்கை-