பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

எட்டு நாட்கள்


திலே, இத்தகு உயர் எண்ணங்களன்றி வேறென்ன மலர முடியும்.

எட்டு நாட்கள் ஓடின; மதவாதிகள் ஏமாந்தனர் ப்ரூனோ வெற்றி பெற்றார்

சதுக்கத்திலே, ஏராளமான கூட்டம்--வேடிக்கை பார்க்க. நாத்தீகனைக் கொளுத்தப்போகிறார்கள், ஆத்தீகர்களுக்கு அந்த வாண வேடிக்கை'யைக் காண்பது தவிர வேறு வேடிக்கை இருக்க முடியுமா! வேடிக்கை மட்டுமா அது--பக்தரின் கடமையுமாயிற்றே!

ப்ரூனோவுக்கு மஞ்சள் ஆடை அணிவித்தனர்--பாவிகளுக்கு. வேத நிந்தகருக்கு, மஞ்சள் நிற ஆடை தருவது வாடிக்கை.

அந்த உடையிலே, பேய் பூதம் பிசாசு, பெரு நெருப்பு, போன்ற சித்திரங்கள்--இவன் நரகம் செல்கிறான் என்பதைக் காட்ட.

இழுத்துச் செல்கிறார்கள் ப்ரூனோவை! ஏறு நடை! கலங்கா உள்ளம்! புன்னகைகூடத் தெரிகிறது.

இரு மருங்கிலும் கூடி நிற்கும் ஏதுமறியாதவர்கள். தூற்றுகிறார்கள்--ஏசுகிறார்கள்! ப்ரூனோ அவர்களைக்கண்டு கோபம் கொள்ளவில்லை.

ஓடி வருகிறார் ஒரு சாமியார் மரத்தாலான சிறு சிலுவையை ப்ரூனோவின் முகத்திற்கெதிரே காட்டுகிறார் சாகுமுன் சிலுவைக்குப் பணியட்டும் என்று !

சிலுவை ! இதன் பெயர் கூறிக்கொண்டு எவ்வளவு அக்ரமத்தைச் செய்கிறீர்கள், அறிவிலிகளே! என்று கேட்-