பக்கம்:எட்டு நாட்கள், அண்ணாதுரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என். அண்ணாதுரை

47


பவர் போல, ப்ரூனோ முகத்தை வேறோர் பக்கம் திருப்பிக் கொள்கிறார்.

கம்பம்--அதிலே கட்டுகிறார்கள் தீ வளருகிறது ! எதிரே காட்டுக்கூச்சல்--ப்ரூனோ அமைதியே உருவானவராக நிற்கிறார். புகை சூழ்ந்துகொள்கிறது. அதைக் கிழித்துக்கொண்டு நெருப்பு தெரிகிறது--உடல் கருகுகிறது--அதோ, அதோ; என்று காட்டுகிறார்கள் -- முகம் தெரிகிறது. தீச்சுழலுக்கு இடையில் அமைதியான முகம் !

தீயோர் மூட்டிய தீ, தன் வேலையைச் செய்து முடித்து விட்டது--ப்ரூனோ சாம்பலாக்கப்பட்டார்.

ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தைக் காட்டு என்று கூறி அன்பு மார்க்கம் சமைத்துத் தந்தார் எமது தேவன் என்று கூறிக்கொண்டனர். அவர்கள் ட்ரூனோவை நெருப்பிலிட்டனர்.

பல தெய்வ வணக்கத்தையும் காட்டுமிராண்டிச் சடங்குகளையும் எதிர்த்து அறப்போர் நடத்திய அண்ணலைச் சிலுவையில் அறைந்தார்கள் பாதகர்கள் என்று கூறின விசுவாசிகள், அந்தச் சிலுவை தரும் நெறியையும் மறந்து, ப்ரூனேவைத் தீயிலிட்டனர்.

"அவர்களை மன்னித்துவிடுக, அண்ணலே, அவர்கள் அறியார்கள் என்ன செய்கிறோமென்று ” என்று சிலுவையில் அறையப்படும் போது ஏசு கூறினாரென்றுரைத்து உருகும் கிருஸ்தவர்கள், ப்ரூனோவைக் கட்டிவைத்துக் கொளுத்தினார்கள்.

ஆதிக்கத்திலிருந்த பல தெய்வ வழிபாடு முறையை எதிர்த்து அன்பு நெறி தந்த ஏசுவின் சொல்லைக் கேட்டும், செயலைக் கண்டும், அந்த ஆதிக்கக்காரர்கள், நாத்தீகன் என்று நிந்தித்தனர்--தெய்வத்தின் பெயர்கூறி வதைத்தனர். சிலுவை காட்சிதந்தது.