பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


நம்மிடம், பத்திரிக்கை உலகம் கொண்டுள்ள பரிவு எப்படிப்பட்டது என்பதை நாம் நன்றாக அறிவோம்.

இருட்டடிப்பு, இட்டுக்கட்டுதல், இழிமொழி கூறல், பழி சுமத்துதல், திரித்துக் கூறல், சிண்டு முடிந்து விடுதல் - இவை அவைகளின் முறை.

நாம் சிறைப்பட்டு, கழகம் செயலாற்ற முடியாத நிலை ஏற்பட்டதும், வரவேற்று, திருப்தி தெரிவிக்கத் துடிக்கும்.