பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160

நான் விரும்பவில்லை.

சோதனை ஏற்படும்போது சிறை செல்ல வேண்டும், அந்த வீர உணர்ச்சியும், தியாக உள்ளமும் வேண்டும், அந்த இயல்பு போற்றப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்பவன், ஆனால், அத்தகையவர்கள் மட்டும்தான் ஒரு கட்சியில் இருக்க வேண்டும், அதற்கு தயாராக இல்லாதவர்களால் கட்சிக்குப் பலனே ஏற்படாது என்று நான் கருதுபவன் அல்ல.