பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165

இது நாங்கள் ஏற்படுத்திக் கொண்ட நிலைமை, வகுத்துக் கொண்ட முறை என்றுதான் கூறுவேன்.

ஏனெனில், அப்போதுதான், கழகத்தின் மீது இழிவு படராமல் இருக்கும்.

மிகப் பெரும்பாலோர் சிறைபுக மறுத்து விட்டனர் - இவ்வளவுதான் இந்தக் கழகத்தின் இலட்சணம் என்ற பேச்சு,