பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


1963ல், வாழ்க்கை நிலை, தொழில் நிலை, குடும்ப நிலை, மனநிலை காரணமாக, சிறைபுக இயலாது இருக்கும் ஒரு கழகத் தோழர், 1965ல் சிறைபுகும் நிலை பெறக்கூடும்.

இதற்கு நேர்மாறாக, 1963ல் சிறைக்கு அஞ்சாது இருக்கும் ஒருவர், 1965ல் சிறை செல்ல முடியாத நிலையினராகிவிடக்கூடும்.