பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44



நமது கழகத்து நிலைமை அவ்விதம் இல்லை. நீண்ட காலச் சிறைவாசத்தின் காரணமாக, பல குடும்பங்கள் சிதறுண்டு போய்விடக்கூடும்.

ஏதாகிலும் ஓரளவு உதவியாவது திரட்டித்தர வழி கிடைத்தாலும், அதனைச் செய்ய, கழகம் இல்லை; ஏனெனில், சட்டம் காரணமாக கழகம் இயங்கப் போவதில்லை.