பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84



கொள்கைக்காகக் கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவு பெறுவதற்கு எந்த கட்சியினரும் தயாராக இருப்பதற்குக் காரணம், பொதுமக்களின் தீர்ப்பு எப்படியும் நியாயத்தின் பக்கம் இருக்கும் என்ற நம்பிக்கையினால்தான். பொதுமக்களின் தீர்ப்புக்கு ஏற்றபடிதான் ஒரு ஜனநாயக ஆட்சி இயங்க வேண்டும். அந்த தீர்ப்பு அளிக்கும் நாளே, தேர்தல் நாள்.

நமது பிரச்சினையைப் பொறுத்தவரையில் அந்தத் தீர்ப்பு நாள் முறையே இல்லை.