பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

விடியுமுன் துடியிடை


சேவலுக்கும் இன்னுமென்ன தூக்கம்? இந்தத்
தெருவார்க்கும் பொழுது விடிந்திட்ட சேதி.
தேவையில்லை போலும்! இதை நான்என்
                                    [தாய்க்குச்
செப்புவதும் சரியில்லை. என்ன கஷ்டம்!
பூவுலகப் பெண்டிரெல்லாம் இக்கா லத்தில்
புதுத்தினுசாய்ப் போய்விட்டார்! இதெல்லாம்
                                      [என்ன?
ஆவலில்லை இல்லறத்தில்! விடியும் பின்னால்;
அதற்குமுன்னே எழுந்திருந்தால் என்ன குற்றம்!
விடியுமுன்னே எழுந்திருத்தல் சட்டமானால்
வீதியில்நான் இந்நேரம், பண்டாரம்போல்
வடிவெடுத்து வரச்சொன்ன கண்ணாளர்தாம்
வருகின்றா ரா வென்று பார்ப்பே னன்றோ?
துடிதுடித்துப் போகின்றேன்; இரவி லெல்லாம்
தூங்காமல் இருக்கின்றேன். இவற்றை யெல்லாம்
ஒடிபட்ட சுள்ளிகளா அறியும்? என்றே
உலகத்தை நிந்தித்தாள் பூங்கோ தைதான்.

32