'பத்து வராகன் பணம் கொடுத்த தாகவும்
முத்துச் சரத்தை அவள் மூடித்தந் தாள் எனவும்
ஈந்த மடையன் இயம்பினான் உங்களிடம்?
அந்தப் பயலை அழையுங்கள் என்னிடத்தில்!
நாடிஒன்று கேட்டான் எனக்கென்ன!
தந்ததுண்டு
மூடிமுக்காடிட்டு மூஞ்சியிலே தாடி ஒட்டி,
நான்போதல் போல நடந்தான் அவளிடத்தில்,
மான் வந்தாற் போல்வந்து வாய்மூத்தம் தந்து
விட்டுப்
போய்விட்டாள் வீட்டுக்குள் பூங்கோதை; மெய்க்
காதல்
ஆய்விட்டாள் பொன் முடிமேல்! அப்பட்டம்!
பொய்யல்ல'
என்று. பண்டாரம் இயம்பவே; நாய்கனவன்
நன்று தெரிந்துகொண்டேன் நான் சொல்வதைக்
கேட்பாய்
என்னை நீ கண்டதாய் என்மகன் பால்
சொல்லாதே;
அன்னவனை தானோ அயலூருக்குப் போகச்
சொல்ல நினைக்கின்றேன். அன்னவன்பால்
சொல்லாதே
செல்லுவாய் என்றுரைத்தான், பண்டாரம்
சென்றுவிட்டான்.
பண்டாரம் போனவுடன் நாயகன் பதை
பதைத்துப்
பெண்டாட்டி தன்னைப் பெரிதும் துயரமுடன்,
38