இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15
அழுதிடுவாள் முழுமதியாள்
“இங்கேதான் இருக்கிறார் ஆதலாலே
இப்போதே வந்திடுவார் என்று கூறி
வெங்காதல் பட்டழியும் என் உயிர்க்கு,
விநாடிதொறும் உரைத்துரைத்துக் காத்து
வந்தேன்.
இங்கில்லை; அடுத்தஊர் தனிலு மில்லை!
இரு மூன்று மா தவழித் தூரமுள்ள
செங்கதிரும் கதிமாறிக் கிடக்கும் டில்லி
சென்றுவிட்டார்; என் உயிர்தான் நிலைப்ப
துண்டோ?
செழுங்கிளையில் பழம்பூப்போல், புதரில் குத்தும்
சிட்டுப்போல், தென்னையிலே ஊச லாடி
எழுந்தோடும் கிள்ளைபோல். எனதுடம்பில்
இனியஉயிர் ஒருகணத்தில்பிரித்தல் உண்மை!
வழிந்தோடி வடக்கினிலே பாயும் இன்ப
வடிவழகின் அடிதொடர்வ தென்ற எண்ணக்
கொழுந்தோடி எனதுயிரை நிலைக்கச் செய்க
"கோமானே பிரிந்தீரா ?" எனத் துடித்தாள்.
44