பக்கம்:எதிர்பாராத முத்தம், பத்தாம்பதிப்பு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இப்போதெப்படி நாய்கன்மார்கள் ?


தேசிகர் சரிதம் சொன்னார்.
செவிசாய்த்தார் நாய்கன் மார்கள்.

ஆசிகள் சொல்லக் கேட்டார் :
அப்போது குருபரந் தான்

தேசிகர் திருமுன் வந்து
சேர்ந்ததும் பார்த் திருந்தார்.

நேசத்தால் தேசிகர் தாம்
நிகழ்த்திய அனைத்தும் கேட்டார்

வடநாட்டை நோக்கிக் சென்ற
வண்ணமும் பாத் திருந்தார்.

உடன் சென்று வழி யனுப்ப
ஒப்பினோர் தமையும் பார்த்தார்.

கடன் ஆற்றத் தேசிகர்க்குக்
கைகளும் குவித்தார். செல்ல

விடை கேட்டார் தேசிகர் தாம்
விடைதந்தார்; எனினும், அந்தோ

77