இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வ.கோ. சண்முகம்.................................................. 6
ஆயிரம் செவிகொடு!
பாசத் தோடே பகர்கின்றேன்
பக்குவப் பதமாம் பாகாக!
ஆசைத் திருவே! சோதரனே!
ஆயிரம் செவியால் கேட்டிடுவாய்!
மனிதப் பிறவி எடுத்துவிட்டால்
வகையாய் வளர வேண்டாமா?
புனிதச் சூத்திரம் ஒன்றுண்டு!
பொறுப்புடன் கேட்பாய் வளர்வதற்கே!
வளரும் உன்னில் ஒளிவீசும்
வற்றாத் தெய்வச் சுடரொன்று
நெளியா, குறுகா, குனியாத
நித்திய அழகாய்த் தேவையடா!
சொந்த நாக்கிரு சியாற்றத்
தித்திக்கும் ஆப்பிளைத் தேடாமல்,
நொந்திடும் ஏழை வெறுங்கரத்தில்
நொங்குகள் நான்கை வழங்கிடுவாய்!