பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வ.கோ. சண்முகம்.................................................8

உண்ணும் உப்பை உனக்களித்தே
உடுக்கும் உடையை உனக்களித்தே
எண்ணாய் எழுத்தாய் உன்அறிவில் இருக்கும் இறைவனே உன்தலைவன்!

வானாய்க் கடலாய்க்கருமலையாய் வந்தே போகும் பருவங்களாய்த்
தேனாய், நஞ்சாய், தீ, நீராய்த்
திகழும் கடவுளே உன்எஜமான்

தேசம், மொழிகள், இனப்பூசல் சிறிதும் அணுகா அவ்விறையை
ஓசை இன்றி வழிபடுவாய்.
உன்றன் 'உயரம்' அதுவேயாம்!