பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15 ...............................எதைத் தேடுகிறாய்.?

எனது சிரிப்புகள் அசல்அல்ல
இதயக் களிப்பின் படமல்ல
மனதில் பொய்கும் ஆசைகளும்
மெளன நிழலில் நசித்துவிடும்

உள்ளவர் எதற்கும் உதவா மனிதர்களை
ஒவ்வொரு நாளும் முத்தமிட்டே
வற்றல் களாக உதடுகளும்
வாடி முற்றும் உலர்ந்ததய்யா

எதற்கும் உதவா மனிதர்களை
ஏதும் மதிப்பே அற்றவற்றைத்
துதித்து வணங்கி என்தலையும்
தூசிப் புழுதியாய் போனதைய்யா?

வற்றல் வல்லவர் வாசர்களை ஒவ்வொரு நாளும் முத்தமிட்டே
வற்றல் களாக உதடுகளும்
வாடி முற்றும் உலர்ந்ததய்யா

தொய்ந்து மெலிந்து தள்ளாடும்
கன்றி போன்ற என்னுடலில்.
நந்த அழுக்குக் கந்தைக்குள்
நாயகா நீ எதைத் தேடுகிறாய்...