பக்கம்:எதைத் தேடுகிறாய்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 ........................... எதைத் தேடுகிறாய்..?


கேள்வியிலா விடையாகி.


பசியெரிக்கக் குமுறுகையில்
பாலமுதச் சுவைக்கனிகள்
ருசியறிந்தே இதமாக
ஊட்டுகின்ற திருக்கரத்தில்
வசிக்கின்ற மெய்க்கருணை
வாஞ்சையதை வியப்பேனோ?


இருள்வழியில் தடுமாறி
இடறிவிழும் தருணமெலாம்
அருள்ஒளியை முன்வீசி;
அறவழியில் எனைச்செலுத்தி
மருள்நீக்கும் மெய்க்கருணை
வல்லமையை வியப்பேனோ?


உள்ளுறும் மனத்தணலாய்
ஓங்கியெழும் சத்தியத்தின்
விள்ளரிய ஆற்றலுறு
வித்தகனாய் எனையாக்கித்
துள்ளவைக்கும் மெய்க்கருணை
சூட்சமத்தை வியப்பேனோ?