பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எனது கதைகளின் கதைகள் ☐

37

என் பேனாவில் பண்டாரமாக வடிவம் பெற்றான்.

நடந்தது.....

இதுபோல் கர்நாடக மாநிலத்தில், மத்திய அரசு விளம்பரத்துறை தலைமை அதிகாரியாக பெங்களூரில் இருந்தேன். அப்போது அங்குள்ள தலைமை கணக்காயர் அலுவலதகத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஒரு ஆடிட்டரை மங்களுருக்கு ‘டூர்’ அனுப்பினார்கள். அவர் ஒரு மாதமாக அந்த ஊரிலிருந்து வரவில்லை. ஒரு வாரத்தில் வரவேண்டியவர். அதிகாரிகள் குழம்பிப்போய் நின்றபோது ஒரு நாள் அவர்கள் முன்னால் அந்த ஆடிட்டர் தோன்றினார். ஒரு வாரத்திற்குள் திரும்பாமல் ஒரு மாதத்திற்கு பிறகு வந்ததற்கு அவரிடம் எழுத்து மூலம் விளக்கம் கேட்கப்பட்டது. உடனே அந்த சூரர், தனக்கு, இலாகாவிலிருந்து ‘டூர் அட்வான்ஸ்’ எனப்படும் முன்பணம் அனுப்பப் படவில்லை என்றும் கையில் காசில்லாததால், ஒரு வார காலப் பணியை முடித்துவிட்டு, மங்களூருக்கும், பெங்களுருக்கும் இடையேயுள்ள முன்னூறு கிலோமீட்டர் துரத்தை 22-நாட்களாய் நடந்து வந்ததாக எழுதிக் கொடுத்தார். இதற்கு தனக்கும், ‘நடை அலவான்ஸ்’ கொடுக்க வேண்டும் என்றும் ஒரு சட்ட விதியையும் குறிப்பிட்டார். அதிகாரிகளால், அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர் கையை காலைப்பிடித்து, ஐந்து நாள் நடந்ததாகவும், எஞ்சிய நாட்களில் விடுமுறையில் இருந்ததாகவும், எழுதித்தரும்படி கேட்டுக் கொண்டார்கள். அவரும் போனால் போகட்டும் என்பதும் போல் பெரியமனது வைத்து எழுதிக் கொடுத்தார். இதை ‘நடந்தது’ என்ற தலைப்பில், கல்கியில் சிறுகதையாக எழுதினேன்.