பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


7
கன்னட வாசனை


சென்னை தொலைக்காட்சி நிறுவனத்திலிருந்து, பதவி உயர்வு பெற்று கர்நாடக மாநிலத்தில், மத்திய அரசின் செய்தி விளம்பரத்துறைக்கு, மாநில அதிகாரியாக பொறுப்பேற்றேன். நான் பொறுப்பேற்ற மறுநாள், ஒரு கன்னடப் பத்திரிக்கையில் தமிழர்களின் ஆதிக்கத்திற்கு என்னுடைய நியமனத்தை மேலும் ஒரு அத்தாட்சி என்று வர்ணித்திருந்தார்கள். விசாரித்துப் பார்த்ததில், எனது அலுவலகத்திலேயே ஒரு சில கன்னட வெறியர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. (இவர்கள் இந்த அளவிற்கு தமிழர்கள் என்றாலே கடும் கோபம் கொள்வதற்கு, நம்மவர்களும் ஒரு காரணம் என்பது வேறு விஷயம்.) சரி... சொல்ல வந்ததற்கு வருகிறேன்.

எனது அலுவலகத்தில், நான் வித்தியாசமான தமிழன் என்பதையும், என்னிடம் பாகுபாடு கிடையாது என்பதையும் அலுவலக ஊழியர்கள் புரிந்து