பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போல் இவர்களின் கட்டை விரல் வெட்டப்படாமல் இருப்பதற்கு எங்கள் அளவில் செயல்பட வேண்டும் என்பதே. இந்தக் கட்டை விரல்களே முஷ்டிகளாகும் என்பது எங்கள் நம்பிக்கை. இதனால்தான் ஏகலைவன் பதிப்பகத்தை துவக்கி இருக்கிறோம். சு. சமுத்திரத்தின் ஒரு சில சிறுகதைகள் அவற்றை பிரசுரிக்கக் கூடிய நிறுவனங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் என்பதால், இந்த பொறுப்பை “ஏகலைவன் பதிப்பகம்” மேற்கொள்கிறது. அடுத்தடுத்து பல்வேறு படைப்புக்களைப் பிரசுரிக்க இருக்கிறோம்.

இந்த நூலுக்கு திருக்குறள் போன்ற முன்னுரை எழுதிய பெரியவர் ஆர். நல்லகண்ணு அவர்களுக்கும், செம்மையாக அச்சிட்ட மாணவர் நகலக உரிமையாளர் சகோதரர் அருணாசலம் அவர்களுக்கும், இந்த நூலுக்கு அட்டைப்படம் வரைவது முதல் இது வெளியாவது வரை முழுப் பொறுப்பேற்ற கவிஞர் இளவேனிலுக்கும் எங்கள் நன்றி உரித்தாகும்.

ஏகலைவன் பதிப்பகம்

நெ.9, இரண்டாவது குறுக்குத்தெரு
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்

சென்னை-41
☎ 4917594