பக்கம்:எனது கதைகளின் கதைகள்.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

சு. சமுத்திரம் ☐

ஒருவேளை சுருக்கிப்போட்டதால் இருக்கலாம்.

சாக்கம்மா

கர்நாடக மாநிலத்தில் இன்னும் மறைமுகமாக தேவதாசி முறை இருந்து வருகிறது. அரசு இதை சட்ட விரோதம் என்று அறிவித்துவிட்ட போதிலும் இந்தக் கொடூரம் இன்னும் நிலவத்தான் செய்கிறது... ஒரு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு அழகான இளம் பெண் இருந்துவிட்டால் போதும். ஜாதி இந்துக்களுக்குப் பொறுக்காது. உடனே அவளை தேவதாசியாக்க வேண்டுமென்று அவளைப் பெற்ற சாமானியனிடம் சொல்லி விடுவார்கள்... சொன்னால் சொன்னதுதான்... இல்லையானால் அந்தக் குடும்பமே நிர்மூலமாக்கப்படும். வேறு வழியில்லாமல் அவள் தேவதாசியாக்கப்படுவாள்... இந்தச் சடங்கும், அதன் சம்பிரதாயமும் அறுவறுக்கத்தக்கது. அந்தப் பாவிப் பெண்ணுக்கு சிவமாகவும், சக்தி சொரூபியாகவும் உள்ள எல்லம்மா சார்பில் பூசாரி அவளுக்குத் தாலி கட்டுவான்... இவளின் முதலிரவு அந்த பூசாரிக்கு... மறுநாள் இரவு இந்த சடங்குச் செலவை ஏற்றுக்கொண்ட மேட்டுக்குடிகாரனுக்கு அப்புறம் அடுத்தடுத்து அந்தஸ்து வரிசையில் உள்ள மேல் ஜாதிக்காரர்களுக்கு... பூவும், காம்புமாய் கசக்கப்படும் இந்தப் பாழும் பெண் நான்கைந்து தகப்பன் பெயர் தெரியாத குழந்தைகளைப் பெற்றெடுத்து, ரோகியாகி வீதியிலே வீசப்படுவாள்.

இந்தச் சடங்கு பெரும்பாலும் வட கர்நாடகத்தி