பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

போக்கும் இன்று சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே ஒரு மனைவி இருக்கும்போது மற்றொரு பெண்ணை மணப்பது இன்று கிரிமினல் சட்டப்படி குற்றமாகும்.

இந்த நிலைமை ஏற்படக் காரணமானவர் யார்? நாம் தானே! கல்லடிகளையும் அதைவிட எதிர்த்தவர்களின் படு மோசமான சொல்லடிகளையும், பிறர் ஏளனத்தையும், ஏசலையும் பொருட்படுத்தாது தாங்கிச் செய்துவந்த சுய மரியாதைப் பணியின் பிரச்சாரத்தின் விளைவாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்ச்சிதான், சர்க்கார் இப்படிப்பட்ட சட்டமியற்றுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதற்குக் காரணமாகும்.

முன்பெல்லாம் தனது மனைவியைப் பிடிக்கவில்லை என்பதற்காகத் தள்ளிவைத்து விட்டுத் தன்னிஷ்டமாக வேறு மனைவியைத் தேடிக்கொள்வதைப் போலச் செய்ய முடியாது. தனது மனைவியை அர்த்தமற்ற காரணங்களுக் காக எவரும் ஒதுக்கிவிட்டு புது மனை வியைத் தேடவும் முடியாது. இருக்கும் மனைவியைத் தள்ளிவிட்டு வேறு மனைவியை மணம் புரிந்துகொள்ள வேண்டுமானால், கணவன் முதலில் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். பிறகு தன் மனைவி கருத்தரிக்கவே முடியாது என்றோ, அவள் குடும்ப வாழ்க்கைக்கு இலாயக்கே இல்லையென்பதையோ, தக்க டாக்டர்களைக்கொண்டு நிரூபிக்க வேண்டும்.

தன் மனைவிக்குத் தீராத நோய் இருந்தால் நீக்கலாம். அதைக் கோர்ட்டில் டாக்டர் மூலம் உறுதிப்படுத்திக் காட்டவேண்டும். மனைவிக்குக் குட்டம் என்பதையோ அல்லது தீராத பைத்தியம் என்பதையோ கோர்ட்டாரின் முன் நிரூபித்த பின்னர்தான் எந்த மனிதனும் இன்று வேறொருத்தியை மீண்டும் மணக்க முடியும் ! இதைப் போலவே இன்றைக்குச் சட்டத்தின் மூலம் மணமக்களுக்கு விவாகரத்து உரிமை தரப்போகிறார்கள்.