பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

இலக்கியமும் வாழ்க்கையும்

தகுதிமிக்க தலைவரவர்களே, டாக்டர் சிதம்பரநாதன் அவர்களே, நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த விழாவினை ஏற்பாடு செய்திருக்கும் மணவழகர் மன்றத்தாரின் இந்த பணி, பயன்பெறத்தக்க பல பணிகளிலே ஒன்றாகும். அவர்கள் ஆண்டுதோறும் நடத்துகின்ற விழாவிற்கு, இவர்கள் ஆற்றுகின்ற பணி உறுதுணையாக இருக்கும். இந்தப் பணியினைத் திறம்பட செம்மையாகத் தோழர்கள் செய்திருக்கின்றனர்! மக்கள் பெரிதும் இலக்கியத்தை அறிந்துகொள்கின்ற வாய்ப்பை இந்த விழாவின் மூலம் அளித்திருக்கிறார்கள்! அதற்காக மணவழகர் மன்றத் தோழர்களை பெரிதும் பாராட்டுகிறேன்!

நம் தலைவர் அவர்கள் நீதிமன்றத்திலே நீதிபதியாக இருப்பவர். இவரை சந்திப்பது இதுதான் முதல்தடவையாகும்! சட்டக் கல்லூரியில் இவரோடு அளவளாவிய நேரத்தில் தமிழ் இலக்கியங்களைப் பற்றி மெத்த அறிந்து கொண்டிருக்கின்றார் என்பதனை தெரிந்து கொள்கின்ற