95
"தோப்பு பக்கமா என்ன வேலை பெரியப்பா"
"பலாப்பழம் வேணும்னு குருக்கள் ஐயரு ஒத்தைக் காலாலே பிக்கறாரு புள்ளே! போயி பறிச்சிகிட்டுவாரேன்”
"பெரியப்பா!நீராகாரம் கொடுக்கட்டுமா?"
"யாருக்கு—எனக்கா? பைத்யக்காரப்புள்ளெ! எனக்குத்தான் மூணுநாளாக் காச்சலாச்சே..."
"மருந்து..."
"சாவுதான்! வேறே என்ன மருந்து இருக்கு நமக்கு, போ புள்ளே! உள்ளே போ!"
* * *
அவ எங்கடி, அம்சா?
அம்சாவா! சமூக சேவையிலன்னா இருக்கா, மகாபலிபுரம் போயிருக்கா.
உங்க அண்ணன் எங்கே தொலைஞ்சான்?
அவனா, கம்யூனிஸ்டு மகாநாடு திண்டுக்கல்லில்; போய் மூணுநாளாறது......
நீ மட்டும்தான் கல்லுப்பிள்ளையாராக இருக்கேன்னு சொல்லு...
இல்லை மாமா! நான், காலம்பறத்தான் காட்பாடியிலேயிருந்து வந்தேன்.
அங்கே, என்ன வேலை?
தெரியாதா நோக்கு. நான் 'சிரமதான்' இயக்கத்திலேன்னா இருக்கேன்—அந்த வேலையாப் போயிருந்தேன்.
அப்பா?
அவர் மூணுமாசமா, போடியலன்னா இருக்கார்—— அடுத்த வெள்ளிக்குத்தான் பட்டாபிஷேகம், பிறகுதான் வருவார்—
பட்டாபிஷேகமா...?