பக்கம்:எனது நண்பர்கள்.pdf/147

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொழிலதிபர் வி. சேஷசாயி

தொழிலறிஞர்

திருச்சிராப்பள்ளி பல தமிழறிஞர்கனையும், இசைப் புலவர்களையும், உயர்ந்த நடிகர்களையும், சிறந்த வணிகர்களையும் பெற்று உதவியது மட்டுமல்ல, அது நல்ல தொழிலறிஞர்களையும் பெற்றுத்தந்து பெருமையடைந்திருக்கிறது. அத்தகைய தலைசிறந்த தொழிலறிஞர்களில் திரு. வி. சேஷசாயி அவர்களும் ஒருவர்.

பெருமகன்

தமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாகிய திருச்சியின் கடும் இருளைப்போக்க மின் விளக்கை ஏற்றிவைத்து ஒளிதந்த பெருமகன். இம்முயற்சியில் கொல்லி மலையிலிருந்து மின்சாரம் கொண்டுவர மேலைநாட்டு அறிஞர்கள் முயன்று தோல்வி அடைந்ததைக் கண்டும், பெரும் முயற்சி செய்து வெற்றிகண்ட பேரறிஞர் அவர்.

ஆலை அதிபர்

திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல், பிற மாவட்டங்கள் பலவற்றிலும் விஞ்ஞானத் துறையில் ஆலைகளை அமைத்து பல்வேறு பொருள்களை உண்டு பண்ணிக் கொடுத்து இந்நாட்டின் தேவைகளை நிரப்பிவந்த ஆலை அதிபர் அவர்.