பக்கம்:எனது நாடகவாழ்க்கை.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160


கம்பெனி தொடங்கிய விஷயம் தெரிந்து, பழைய மானேஜர் காமேஸ்வர ஐயர் வந்து சேர்ந்தார். கருப்பையாபிள்ளை கம்பெனி அதற்குள் கலைந்து விட்டதால் சும்மா இருந்த ஐயரை அவரது விருப்பத்தின்படி எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொண்டோம். அவருடைய போக்கு எங்களுக்குப் பிடிக்காவிட்டாலும் நல்ல நிருவாகத் திறமையைக் கருதி, இடமளித்தோம். மானேஜர் ஐயர் வந்து சேர்ந்தவுடன் இரண்டாம் நாளே ஒரு மாறுதல் செய்தார். உரிமையாளர் ஸ்தானத்திலிருந்த சிற்றப்பா பெயரை நீக்கி விட்டார். இரண்டு நாடக விளம்பரங்களில் எந்தப்பெயரும் இல்லாதிருந்தது. சிற்றப்பாவுக்குக் கோபம் வந்து விட்டது. ஐயரைக் கடுமையாகக் கண்டித்தார். ஐயர் ஏதோ சமாதானம் சொல்லிப் பார்த்தார். ஒன்றும் சரிப்படவில்லை. கடைசியாகச் சிற்றப்பா பெயர் மறுபடியும் ஒழுங்காக விளம்பரங்களில் போடப் பெற்றது.