இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
483
1945 இல் தமிழ் நாடகப் பரிசுகள் மூலம் எங்களுக்குக் கிடைத்த இராஜராஜ சோழன் நாடகத்தைத்தான், பத்தாண்டுகளுக்கு பின் 1955இல் அரங்கேற்றினோம். அதனைப் பற்றிய விவரங்களைப் பின்னால் அறிவிப்பேன்.
தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்காக இப்படி ஒரு பரிசுத் திட் டத்தை 28 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் நடத்தினோம் என்ற செய்தியினை இன்றையத் தலைமுறையினார் அறிந்திருக்க முடியாதல்லவா? அதனால்தான் சற்று விவரமாக இதனைக் குறிப்பிட்டேன்.
தமிழ் நாடகப் பரிசினை நாங்கள் வெளியிட்டதற்கும், அது பற்றிய முடிவினை அறிவித்ததற்கும் இடைப்பட்ட நீண்டகால இடைவெளியில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகளும், கவலை தரும் சம்பவங்களும் நடந்துள்ளன. பரிசு பற்றிய செய்தினைத் தொடர்பாக அறிவித்துவிட எண்ணியே இடைப்பட் நிகழ்ச்சிகளைச் சிறிது ஒத்தி வைத்தேன்.