பக்கம்:எனது பூங்கா.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவன் அமரன்?



பாடல்கள் பாடியவன்" என்று நினைத்துப் புன்சிரிப்புக் கொண்டார்கள்.

இப்பொழுது நானூறு வருஷங்கள் கழிந்து விட்டன. இந்த நானூறு வருஷ காலத்தில் அவனுடைய கீர்த்தி உலகமெங்கும் பரவிவிட்டது. இப்பொழுது அவனுடைய பெயர் தெரியாத நாடு கிடையாது. ஆமாம், அவனைத் தண்டித்த அந்த ஜமீன்தார் அழிந்து போனார்: ஆனால் அவர் தண்டித்த அந்த இளைஞன் அழியாவரம்பெற்று விட்டான். அவன்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர்.


—[★]—

–101–

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/103&oldid=1391677" இலிருந்து மீள்விக்கப்பட்டது