இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15. பெண் கல்வி
எனக்கு ஒரு பெண் இருக்கிறாள். பாடசாலைக்குப் போய் வருகிறாள். அவளைப்பற்றியும் அவளுடைய கல்வியைப் பற்றியும் அடிக்கடி சிந்திப்பேன். அப்பொழுதெல்லாம் சில சந்தேகங்கள் தோன்றும் அவற்றை வாசகர்களிடம் கூறினால் என் ஐயப்பாடுகள் நீங்கலாம் என்று எண்ணி எழுதுகிறேன்.
நம்முடைய பெண்களுக்குப் பாடசாலைகளில் தமிழ்ச் செய்யுட்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். அத்தகைய செய்யுட்பாடங்களுள் குமரகுருபரர் அருளிய நீதிநெறி விளக்கம் ஒன்று. அதை வித்வான் பரீட்சையில் தேறிய ஆசிரியை அம்மையார் கற்றுக் கொடுக்கும் போது,
கற்றோர்க்குக் கல்விநலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம்-முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா, யாரே
அழகுக்கு அழகு செய்வார்.
என்னும் செய்யுள் வந்தவுடன் அதை அவா எவ்வாறு கற்பிப்பார் என்று எனக்கு விளங்குவதாயில்லை.
—102–