பக்கம்:என்னுரை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீண்ட தையல் போடப்பட்டிருந்தது. காலில் ஏன் தையல்? இங்கிருந்து தான் வெய்ன் எடுத்து அடைபட்டிருந்த ரத்தக் குழாய்களுக்குப் பக்கத்தில் பை-பாஸ் குழாய் போட்டுச் சீரான ரத்த ஓட்டத்துக்கு வழி செய்துள்ளார்கள். மூன்று நாள் கழித்து என்னைப் பார்க்க சுஜாதா வந்திருந்தார். நான்தான் அதிகம் பேசினேன். என் ஆபரேஷன் அனுபவங்களை அவரிடம் எழுத்தாளர் கோணத்தில் சொன்னேன். 'இவ்வவு பெரிய சமாசாரத்தை ரொம்ப லேசாக்கி இத்தனை நகைச்சுவையோடு சொல்கிறீர்களே! என்று சிரித்து மகிழ்ந்தார் சுஜாதா. என் பேச்சு அவருக்குப் புதுத்தெம்பையும் தைரியத்தையும் அளித்திருக்க வேண்டும். அப்புறம் ஏழெட்டு நாட்களே ஆஸ்பத்திரியில் இருந்தேன். டாக்டர் கிரிநாத் வந்து "யூ ஆர் ஆல்ரைட் உங்களை டிஸ்சார்ஜ் செய்கிறேன். நீங்கள் வீட்டுக்குப் போகலாம், பழையபடியே எல்லா வேலைகளையும் கவனிக்கலாம்,' என்றார். பிறவி யிலேயே எனக்கு அமைந்து வி ட்ட மனத்திட்பம், மனைவி யின் மாங்கல்ய பலம், ஏழுமலையானின் அருள் மூன்றும் சேர்ந்து என்னைக் காப்பாற்றி விட்டன. 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/101&oldid=759574" இலிருந்து மீள்விக்கப்பட்டது