பக்கம்:என்னுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டும். அவரது சுயசரிதையை நான் தமிழில் கொண்டு வந்த போது செலவழித்த ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கெழுதிக் கொடுத்தேன். என்னை அவர் சரியானபடி கணிப்பதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. பண விஷயத்தில் நேர்மையுடன் செயல்படுவது என்பதை அன்று தொட்டு இன்று வரை நான் ஒரு விரதமாகவே கடைப்பிடித்து வருகிறேன். காலத்தினால் அவர் எனக்குச் செய்த உதவியை என் காலமெல்லாம் மறக்க மாட்டேன். நான் யாருக்காவது சிலை வைப்பதாக இருந்தால் அது நாயர்ஸ்ானுக்காகவே இருக்கும். நாயர்ஸான் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர் தூண்டிவி ட்ட, என்னுள் துரங்கிக் கொண்டிருந்த நேர்மை ஒளி, இன்றும் பிரகாசமாய்ச் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது! 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/32&oldid=759598" இலிருந்து மீள்விக்கப்பட்டது