பக்கம்:என்னுரை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. கருணாநிதி முதலமைச்சர் முன்னுரை 7ென்னுடைய கெழுதகை நண்பரும் . தமிழ் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பிடித்துக் கொண்டிருப்பவருமான திரு. சாவி அவர்கள் , 'குங்குமம்' இதழில் கிழைமைதோறும் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகளையும், மேலும் சில கட்டுரைகளையும் தொகுத்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அவர் குங்குமத்தில் எழுதத் தொடங்கும்போதே, அதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று என்னைக் கேட்டபோது, நான்தான் அவரிடம் "என்னுரை' என்ற தலைப்பிலேயே கிழமைதோறும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள் என்று கூறியிருந்தேன். அந்தத் தலைப்பிலேயே "என்னுரை' என்ற பெயரிலே இந்த நூல் வெளியிடப்படுகின்றது. இந்த நூலினையும் நான்தான் வெளியிடவிருக்கின்றேன். அந்த அளவிற்கு திரு.சாவி அவர்களுக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

r இந்த நூலிலே எஸ். எஸ்.வாசன், ராஜாஜி, ஜி.டி.நாயுடு, பெரியார், மகாத்மா காந்தி, காமராஜ்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/5&oldid=759617" இலிருந்து மீள்விக்கப்பட்டது