பக்கம்:என்னுரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போய்க் கொண்டிருக்கிறேன். உழைக்கணும்யா, நல்லா உழைக்கனும், அப்படிப் பிடிவாதமாய்ப் பிரசாரம் செஞ் சாத்தான் நம்ம லட்சியத்துல வெற்றி காணமுடியும்! என்றார். இந்த வார்த்தைகள் ஆணி அடித்த மாதிரி என் உள்ளத்தில் பதிந்துவிட்டன. அன்று பெரியார் அவர்களிடம் கற்றுக் கொண்ட பாடத்தை நான் இன்று வரை என் வாழ்க்கையில் மறக்காமல் கடைப்பிடித்து வருகிறேன். - முதல் முதல் பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்த போது எத்தனை உற்சாகத்துடன் இருந்தேனோ, அதே உற்சாகம் இன்றளவும் இம்மியளவும் குறையவில்லை. 57

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:என்னுரை.pdf/58&oldid=759626" இலிருந்து மீள்விக்கப்பட்டது