பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை

Ο

97

பிள்ளை வயிற்றில் இருக்கும் போது தாய், மூட நம்பிக்கை உண்டாக்கும் புராணக் கதைகளைப் படித் திருந்தாலும், முட்டாள் தனமான செய்திகளைக் கேட்டிருந்தாலும், பிறக்கும் பிள்ளை முட்டாளாக மாறு கிறது. அதே தாய். அறிவுக் கதைகளையும், செய்திகளை யும் பிள்ளைப்பேற்றுக் காலத்தில் மனத்தில் போட்டுக் கொண்டிருந்தால், பிறக்கும் பிள்ளையும் அறிவாளி யாகும் பேற்றைப் பெறுகிறான். எல்லா வேலைகளுக்கும் பெண்கள் வந்துவிட்டால் ஆண் கள் என்ன செய்வது?

இருக்கவே இருக்கிறது வீட்டு வேலைகள். மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே.

எனக்கு வயது பதினெட்டு. நான் திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். உங்கள் கருத்து என்ன? கிழவர்கள் உங்களை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு காதல் செய்யத் தொடங்கி விடுவார்களே! பாவம்! பதினெட்டு வயதுப் பெண்ணுக்கு இந்தக் கதி வரலாமா?

அன்பைவிடச் சிறந்தது எது? பணம். அன்புக்காக உதவுபவர்கள் சிலர் பணத்திற்காக உதவுபவர்கள் பலர்; பலப்பலர். அழகிப் போட்டிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அழகிப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின்

படங்களைப் பார்த்தால் அவர்கள் அழகிகளாகக் காணப்படவில்லை. பண்புள்ள பெண்கள் அழகை

விளம்பரப்படுத்த எண்ணுவதில்லை. அ-7