பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை 103

C

கூடித்தொழில் செய்தோர் கோடி நன்மை பெற்றார் என்பது பாவேந்தர் வாக்கு. தனித்தொழில் முன்னேற நாள் மிகுதியாகும். கூட்டுத் தொழில் விரைவில் வளர்ச்சியடையும். ஆனால், மற்றவர்களை மதித்து நம்பிக்கையோடு நடந்து கொள்ளவேண்டும். நம்பிக்கை யும் நாணயமும் கூட்டுத் தொழிலுக்கு மிக இன்றியமையாதவை. அதிக நாட்கள் வாழ என்ன செய்ய வேண்டும்? நீண்ட நாட்கள் வாழத் திட்டமிட்டு வாழ்ந்தவர்கள், விரைவாகத் தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டு விட்டார்கள். சாவாமல் இருப்பேன் என்று சொன்னவர் கள் இருக்கும் இடம் தெரியவில்லை. வாழ்வில் ஒழுங்கும் ஒழுக்கமும், எளிதில் உணர்ச்சிகளுக்கு ஆட்படாத மனப்பக்குவமும் தன்னம்பிக்கையும் கடமையுணர்வும் இருந்தால் நீண்ட நாள் வாழக்கூடும். கொலைகாரர்களைக் கொல்லுவது பாவமல்ல என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறாரே? கொலைக்குக் கொலை அறம் ஆகுமா? - இன்றைய அறச் சிந்தனையாளர்கள் வள்ளுவரையும் மிஞ்சி விட்டார்கள். கொலைத் தண்டனையே சட்டத் தில் இருக்கக் கூடாது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. கொலைகாரர்களுக்கு உயர்ந்த தண்டனை யாக ஆயுள் தண்டனையே போதுமானது என்று அறநெறியாளர் கருதுகிறார்கள். தன்னிடம் குறையுள்ளவன் பிறர் குறையைக்கூறலாமா? கூறக்கூடாது. உடனே அவர்கள் திருப்பிக் கூறுவார்கள் தான் வருந்த நேரிடும். தம்முடைய குறையை நீக்கிக் கொள்ளாமல் பிறர் குறையை நீக்குபவர்கள் பெரியோர் என்று புலவர் பாடியிருக்கிறார். நிலா, தன்னிடமுள்ள