பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

5

பெண் போலீஸ் படை தமிழ் நாட்டுக்குத் தேவைதானா?
சுதந்திரம் அடைந்த உடனேயே அனைத்து இந்தியாவிலும் அமைத்திருக்க வேண்டியது. ஆனால் யாரும் அக்கரை காட்டவில்லை. இப்போது தான் சில மாநிலங்கள் தொடங்கியிருக்கின்றன. நாட்கழித்தாவது நல்ல செயல்களில் ஈடுபட முனைகிறார்களே, பாராட்டுவோம்!
கடத்தல் சம்பந்தமாக இதுவரை கடத்தலுக்குத் துணை நின்ற எந்த அதிகாரியும் கைது செய்யப்படவில்லையே?
யாராவது ஓர் அதிகாரியைக் கைது செய்தால் அந்தத் துறையில் உள்ளவர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வார்கள். சில சிலைகள் கடத்தப்பட்டது. கண்டு பிடிக்கப்பட்ட போது இவ்வாறு நடந்தது. அதனால், அரசு அதிகாரிகளைக் கைது செய்யப் பயப்படுகிறது. இந்நிலையில் அரசு கடத்தலை முற்றிலும் ஒழிக்கத் திறனற்றதாயிருக்கிறது.
ஒருவரை நேருக்கு நேர் எதிரில் வைத்துக் கொண்டு வானளாவப் புகழ்கிறவர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
புகழுக்குரியவரின் தயவையும், அந்தத் தயவு காரணமாக அவரிடமிருந்து சில சலுகைகளையும் பெற ஒருவர் கையாளுகின்ற கலையே நேருக்கு நேர் புகழும் கலை யாகும். இந்தக் கலையில் சிறந்தவர்கள், யாரும் பொதுநல வாதிகளாக இருந்ததில்லை.
ஒரு மனிதர் ஒருவரிடம் சற்று முன் தேனொழுகப் பேசிக் கொண்டிருந்தார். அடுத்தவரிடம் சட்டென்று சீறி விழுந்தார். இப்படிக் குணம் மாறுவதன் காரணம் என்ன?