பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114. என்ன? ஏன்? எப்படி?

வருவதால், நாம் அவற்றின் நிலைகளைக் கணக்கிட்டு விட முடியும். இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பிறகோ, நூறு ஆண்டுகளுக்குப் பிறகோ, இன்ன தேதியில் இன்ன மனியில் இருக்கும் என்பதைக் கணித்துவிட முடியும். அவற்றின் நிலைகளை வைத்து மனிதனுக்குப் பலன் சொல்லுவதுதான் மொட்டைத் தலைக்கும் முழங் காலுக்கும் முடிச்சுப் போடுவதாயிருக்கிறது. இதுதான் சோதிடர்கள் செய்யும் புரட்டாகும். ஹீரோஷமாவின் மீது அணுகுண்டு விழுந்தபோது இறந்த ஆண், பெண், கிழவர், குழந்தைகள் அத்தனை பேருக்கும் ஒரேமாதிரி யான சாதகம் என்று எந்தச் சோதிடனும் வாதிட முடியாது.

e பணம் விளையாடுகிறது என்கிறார்களே, அதன்

பொருள் என்ன?

O நேற்றுவரை சோஷலிசம் பேசிக்கொண்டிருந்தவர் இன்று திடீரென்று அதை எதிர்த்துப் பேசுகிறார். நேற்று வரை என்தலைவர், என்தலைவர் என்று ஒருவரைப் போற்றிக் கொண்டிருந்தவர் இன்று வேறொருவரை என் கடவுள் என் கடவுள் என்று பேசத் தொடங்குகிறார். கள்ளக் கடத்தல் பொருள் அடங்கிய பெட்டி என்று தெரிந்தும் சுங்க அதிகாரி அதன்மேல் சுண்ணக் கட்டி யால் கையெழுத்துப் போட்டு ஏற்றுமதிக்கு அனுமதி யளிக்கிறார். சாலை விதியை மீறியவன் என்று பிடிக்கப் பட்டவனைச் சிறிது நேரத்தில் காவலர் விட்டுவிடு கிறார். இவர்களெல்லாம், தங்களுக்குக் கிடைக்கும் சிறு தொகைக்காகப் பெருங்குற்றங்களை அனுமதிக்கிறார் கள். இதைத்தான் பணம் விளையாடுகிறது என்று குறிப் பிடுவது வழக்கமாயிருக்கிறது.