பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 என்ன? ஏன்? எப்படி?

O பாவம், அவர்கள் பதில் சொல்லவே தெரியாதவர்கள். போகின்ற பத்திரிகைக்காரர்கள் கண்டதையெல்லாம் எழுதி, அவர்கள் பெயரில் போட்டுக் கொள்ளுகிறார்கள்.

0 காதல் தெய்வீகமானது என்கிறார்களே அதன் கருத்து

6Tira?

O கதாசிரியர்கள் காதலர்களைப் பிரித்து, வேறு சோடி சேர்த்து, அவர்கள் ஒருவரையொருவர் மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கும்படி செய்வார்கள். அழியாது நிற்பதால் இது தெய்வீகக் காதல் என்று வருணிப்பார் கள். இன்னொருவருக்கு உரிமையாகி விட்டவர்களை நினைத்துக் கொண்டிருப்பது ஒழுக்கக் கேட்டிற்கு வழி வகுக்கும் என்பதை இவர்கள் நினைத்துப் பார்ப்ப தில்லை.

சிலருக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்க வில்லையே? மீசைக்கு வயது உண்டு. ஆசைக்கு வயது கிடையாது.

உறவுக்குள்ளேயே பெண் கொள்வதால், உள்ள உறவு வலுப்படும் என்கிறார்களே? தவறான கருத்து. புது உறவுகளைத் தடுக்கும் முறையிது. மேலும் உறவுத் திருமணங்களால் பாரம்பரியத்தின் வலிமை குறைந்து போகிறது. கலப்பு மணத்தால் வலிவும் பொலிவும் மிக்க பாரம்பரியம் உண்டாகிறது. கால்நடை ஆராய்ச்சிகள், கலப்புமணத்தையே வலியுறுத் கின்றன.

.