பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

7

களைப் பாராட்டுபவர்கள், அவர்களின் குற்றங்களைத் தேடிப் பறை சாற்றிக் காசாக்கும் கயவர்களோடு ஒப்பிடும்போது உயர்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.
பொருளாதாரச் சீர் குலைவிற்குக் காரணம் முதலாளித்துவம் தானே?
இன்று நம் இந்தியப் பொருளாதாரச் சீர்குலைவிற்குக் காரணமாயிருப்பவை முதலாளித்துவம் மட்டுமல்ல; கம்யூனிசமும் சோஷலிசமுமே யாம்! முதலாளிகள் தம் சொந்த லாபத்துக்காக நாட்டைச் சீர்குலைப்பது போலவே கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்டுகளும், தங்கள் சொந்த லாபத்துக்காக நாட்டைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முகவரி மாறினால் போதுமா? அகநிலையல்லவா தூயதாயிருக்க வேண்டும்!
நாட்டு டைமையாக்கப்பட்ட பாங்குகளில் கடன் சலுகைகள் நிறுத்தப்பட்டிருக்கிறதாமே?
ஈட்டிக்காரர்கள் பிழைக்க வேண்டாமா?
பெரியாருக்குள்ள சிறப்பு என்ன?
உலக விடுதலை வீரர்கள் அனைவரும் காந்தியடிகள் உட்பட நாட்டு அடிமைத்தனத்தை ஒழிக்கப் பாடு பட்டார்கள். நமது பெரியார், சமுதாய அடிமைத்தனம் ஒழியப் பாடுபட்டார். அவருடைய சிந்தனைகள். தன் அடிப்படை உரிமைகளை ஒவ்வொருவனும் பெற வழி வகுத்தன.
பஞ்சம் எப்படி யுண்டாகிறது?
மழை பெப்யாவிட்டால் விளைவு குன்றிப் பஞ்சம் ஏற்படுவதுண்டு. புயல், வெள்ளம் இவற்றால் சேதம்