பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

9

யிருக்கும்? அவர்களையும் மனிதர்களாக எண்ணிச் செயலாற்றும் முதல்வருடைய பிச்சைக்காரர் மறு வாழ்வுத் திட்டத்துக்கு தாராளமாக உதவுங்கள்; உங்கள் தொல்லையும் ஒழியும்; அவர்கள் தொல்லையும் ஒழியும்.
சிக்கிம் நாட்டுக்கு மாநில சுயாட்சி வழங்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கும் அவ்வாறு வழங்குமா?
தமிழர்களின் ஒற்றுமை வலுப்பெற்றால், மாநில சுயாட்சி கிடைக்க நாள் கடக்காது. உரிமை என்பது எப்போதும் பிறர் கொடுத்துப் பெறுவதன்று, வேண்டுவோர் தாமே எடுத்துப் பெறுவதாகும்.
அரசியல் வாதிகள் விஞ்ஞானிகளானால் என்ன செய்வார்கள்?
அடிக்கடி கட்சி மாறுவதற்கு வசதியாக பறக்கும் லிப்டுகளைச் செய்து கொள்ளுவார்கள்.
கருப்புப் பணவேட்டை தீவிரமாக நடக்கிறதே!
பாவம்! பலியாடுகள்! உயர்நிலையில் உள்ள சில பன முதலைகளைக் காப்பாற்றுவதற்காக நடைபெறுகின்ற நாடகம் அது. கருப்புப் பணத்தைத் தடம் பிடித்தால் எங்காவது ஒர் அமைச்சர் வீட்டு வாசற்படிவரை போகிறதாம்!
வன்முறைகள் எப்போது நம் நாட்டை விட்டு ஒழியும்?
வெள்ளைக் காரன் ஆண்ட காலத்தில் தண்ட வாரத்தைப் பெயர்த்த செய்தி கேட்டு காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தார். ஆளுபவன் வெள்ளைக் காரணாயிருந்தாலும், தண்டவாளமும் ரயிலும் நம் நாட்டுச் சொத்து என்பது காந்தியடிகள் கருத்து. இச்சொத்தைப் பாழாக்குவது தேசத் துரோகம் என்று அவர்