இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
என்ன? ஏன்? எப்படி?
கூறினார். இன்று சுதந்திர ஆட்சியில் பொருள் சேதம் விளைக்கும் செயல்கள் நடைபெறுகின்ற தென்றால், நம்மவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்பதையே காட்டுகிறது. வன்முறையில் ஈடுபடும் அல்லது தூண்டி விடும் பேர்வழிகளின் மீது அவ்வக் கட்சித் தலைவர் களே நடவடிக்கை எடுக்கும் வாய்மை ஏற்படும் வரை நாம் முன்னேற முடியாது. | |
• | கேரோ செய்வது பற்றி தங்கள் கருத்தென்ன? |
◯ | காலம் ஆக ஆக மனிதனின் அறிவு வளரவேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். ஆனால், சில தீயசக்திகள் நம்மைப் பின்னோக்கித் தள்ளுகின்றன என்பதற்கு இது எடுத்துக்காட்டு. இத்தகைய செயல்களால் நாம் காட்டு மிராண்டிக் காலத்திற்குப் போய் கொண்டிருக்கிறோம். |
• | ஊழல் எப்போது ஒழியும்? |
◯ | ஊழல் ஒழியவேண்டும் என்று சொல்பவர்கள் ஊழல் பேர் வழிகளாக இல்லாத போது. |
• | அரசியல் ஒரு சாக்கடை என்றால் அரசியல் வாதிகள்...! |
◯ | அரசியலைச் சாக்கடையாக்கும் பணியைப் புரிபவர்கள், அரசியல் வாதிகள் தாம். அரசியல் வாதிகள் உண்மை யாகவே நாட்டுப்பற்றுடன் பணிபுரியத் தொடங்கினால் அரசியல் புனித கங்கையாகி விடும். |
• | நீங்கள் முதல் அமைச்சரானால் என்ன செய்வீர்கள்? |
◯ | நான் முதல் அமைச்சராக விரும்பவில்லை. ஏனெனில், ஒரு மாநில முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் டில்லியை எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில் எதிர் பார்க்கிற மாறுதல்களை நாம் செய்ய முடியாது. |