பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

17

மண்ணின் மைந்தர்கள் கொள்கையை நாம் ஆதரித்தூால்...?
சிவ சேனையீனர் தமிழர்களின் கடைகளைச் சூரையாடுவதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரனாமே?
வெள்ளைக்காரர்கள் நமது தேசபக்தர்களையெல்லாம் கொள்ளைக்காரர்கள் என்றும், நமது புரட்சி வீரர்களை யெல்லாம் கலகக் காரர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். பகுத்தறிவில்லாதவர்களே இதை நம்புவார்கள்.
வாழ்க்கையை வெறுத்தவர்கள் அந்தக் காலத்தில் துறவு பூண்டார்கள்; இந்தக் காலத்தில் என்ன செய்கிறார்கள்?
அரசியல்வாதி யாகிறார்கள்!
சேலத்தில் நடந்த காந்தி சிலை உடைப்புப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு தவப்புதல்வனைப் பெற்ற பாரத அன்னை சில அவப்புதல்வர்களையும் பெற்றுப் போட்டாளே வேலையற்றுப்போய் என்று அங்கலாய்ப்பதைத் தவிர வேறு என்ன செய்வதற்கிருக்கிறது!
கதர் கள்ள வாணிபத்தின் சின்னமாகக் கருதப்படு வதால், காங்கிரஸ்காரர்கள் கதர்கட்ட வேண்டும் என்ற விதியைத் தள்ளி விடும்படி இ. காங்கிரஸ் மாநாட்டில் பேசினார்களாமே!
கள்ள வாணிபத்தைக் கைவிட்டுக் கதரின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும் என்று பேசியிருந்தால் பாரத மாதா உள்ளங் குளிர்ந்திருக்கும், கதரை ஒதுக்கும்படி பேசப் பட்டது கேட்டு மனம் புண்ணாயினாள் மாதா.

அ-2