பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

என்ன? ஏன்? எப்படி?

திக்கற்ற பார்வதி படத்தைப் பரிசுக் குரியதாக டில்லி தேர்த்தெடுத்திருக்கிறவே!
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை, மக்கன் போற்றாத படத்தை அரசாவது பாராட்ட வேண்டாமா?
ஜெயப்பிரகாஷ் நாராயணன் மாணவர்களைப் புரட்சி பில் ஈடுபடும்படி அழைத்திருக்கிறாரே?
அரசியல் வாதிகளுக்கு மாணவர்களை வீட்டால் வேறு கதியில்லை, வயது வந்தவர்கள் குடும்பம், தொழில் என்று சில சங்கடங்களில் மாட்டிக் கொண்டுள்ளார்கள். பொறுப்பில்லாமல் எதையும் செய்யக் கூடிய நிலையில் எப்போதும் தயாராக இருப்பவர்கள் மாணவர்களே. இவர்களை நம்பித்தான் எல்லா அரசியல் கட்சிகளும் உயிரோடு வாழ்கின்றன.
அரிசனங்கள் அர்ச்சராகவே முடியாதா?
இருக்கின்ற சட்டப்படி முடியாது என்று நீதிமன்றம் கூறுகிறது. சட்டத்தை மாற்ற வேண்டியது மைய அரசின் கையில் இருக்கிறது. சாதி வெறி ஒழிய வேண்டுமென்றால் சட்டத்தைத் திருத்தினால் தான் முடியும்.
ஜானாதிபதி பதவியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்கள் பணத்தை வெட்டியாகச் செலவழிக்கஏற்படுத்தப் பட்டுள்ள ஒரு பதவி. கையெழுத்துப் போடும் ஒரே ஒரு சடங்குக்காக இவ்வளவு பெரிய பதவியை நம் அரசியல் மேதைகள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்,
போலீஸ்காரர்கள் சில சமயம் மிருக வெறியோடு செயலாற்றுகிறார்களே?