பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல்

19

அது அவர்கள் குற்றமல்ல, அவ்வாறு செயலாற்றும் வாய்ப்பை ஏற்படுத்துகின்ற கலகக்காரர்களின் குற்றமே! போலீஸ்காரர்களைக் கண்டிப்பதைவிடக் கலகக்காரர் களைக் தண்டிப்பதிலேயே நம் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
பணம், புகழ், பதவி மூன்றையும் ஒன்றாகப் பெற ஒரு வழி கூறுங்கள்.
அரசியலில் ஈடுபடுங்கள். தீவிர அரசியல்வாதியாகுங்கள். மேலும் பணம் சேர்க்க அடிக்கடி கட்சிமாறுங்கள். நம் நாட்டில் இப்படித் தான் விதி எழுதப்பட்டிருக்கிறது.
நூறு ரூபாய் நோட்டைச் செல்லாது என்று அறிவித்தால், கள்ளப் பணத்தை ஒழித்துவிடலாமென்று

சொல்லுகிறார்களே?

பத்து ரூபாய் நோட்டை பதுக்கி வைத்திருப்பவர்கள் இவ்வாறு சொன்னால், கள்ளப் பணம் எவ்வாறு ஒழியும்? மக்கள் வசதிதான் குறையும்.
மண்ணுக்குரிய மைந்தர்கள் என்ற முறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
வெறுப்புக்குரிய முறை! வெறுப்பிலே பிறந்து வெறுப்பிலே வளர்ந்து வெறுப்பிலே வெடிக்கும் கேடு கெட்ட முறை. பிற மாநில அரசுகள் இம் முறையைப் பின் பற்றுவதால், தமிழக அரசும் பின்பற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
புதிது புதிதாகத் தோன்றும் கட்சிகளைப் பற்றி என்ன நினைக்சிறீர்கள்?
இது நம் நாட்டைப் பிடித்த நோய். கட்சிகள் தோன்றித் தோன்றி தம் நாடு குட்டிச் சுவராகிக் கொண்டு வரு-