பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல். 25

ஒதுக்கிவிட்டு, செயப் பிரகாசர் கூறும் முை றயில் தேர்தல் களை வைத்துக் கொள்ளவேண்டும். . சிற்றுார் மக்கள் கூடித் தங்கள் ஊரில் சிறந்த ஒழுக்கமுள்ள, ஆற்றலுள்ள ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்படிப் பட்ட தலைவர்கள் கூடி غـا شابه தலைவர்களையும் வட்டத்தலைவர்கள் சட்ட சபையையும் அமைச்சரவை யையும் தேர்ந்தெடுக்கவேண்டும். அப்போது தான் நாம் பொதுவாழ்வில், ஒழுக்கத்தையும், நேர்மையையும் காணமுடியும்.

எதற்கெடுத்தாலும் சிலர் போராட்டம் என்று கூவிச் கொண்டிருக்கிறார்களே! - கொழுப்பெடுத்தவர்கள் போராட்டங்களைத் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். வெறி பிடித்தவர்கள் போராட் டங்களில் ஈடுபடுகின்றார்கள். பசியெடுத்தவர்கள் எந்த வழியிலும் விடிவு காணாமல் விழிபிதுங்கிச் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உலகில் தமிழர்கள் நிலை எப்படியிருக்கிறது:

பர்மாத் தமிழர்கள் பயணத்திற்குக் கப்பல் கிடைக்காமல் அவதிப்படும். அகதிகளாக நிற்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் சிங்கள வெறிக்குப் பலியாடுகளாய் காட்சி யளிக்கிறார்கள். பம்பாய்த் தமிழர்கள் சிவசேனை புகுந்தழித்த வயலாய்க் கிடக்கிறார்கள். இந்தியத் தமிழனோ டில்லி அரசுக்கு ஒர் அலட்சியப் பொருளாய்க்

காணப்படுகிறான்.

மதுவிலக்கை ஏற்படுத்த அனைத்திந்திய அடிப்படையில் ஏன் முயலக்கூடாது?

எல்லாம் பணம்தான் காரணம். மதுவிற்பனையால் ஒவ்

வொரு மாநில அரசுக்கும் நிறைய வருவாய் கிடைக்