பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

.

என்ன? ஏன்? எப்படி?

கிறது. இந்த வருவாயை இழக்க அரசுகள் முன்வர வில்லை. ஒரு சிலரைக் கெடுத்தாவது இந்த வருவாயை அடையவேண்டும் என்று பாரத புத்திரர்கள் தினைக் கிறார்கள். அரசு வரும்படிக்காக மக்கள் கெட்டழிவதை

அனைத்திந்திய அரசியல் தலைவர்களும் வரவேற்கிறார்

கள். தியாகமனப்பான்மை காந்தியோடு செத்துவிட்டது.

இந்தியப் பொருளாதாரம் எங்கே சென்று கொண்டிருக் கிறது.

கள்ளச் சந்தைக்கு!

காமராசர் தமிழ் மொழிக்குச் செய்த நன்மை என்ன? பெருந்தலைவர் காமராசர் மொழித்துறையில் ஈடுபாடு கொண்டவரல்லர். அதனால் அவர் தமிழ்மொழி பற்றிச் சிந்தை செலுத்தியதில்லை. அரசியலில் அதுவும் அனைத் திந்திய அரசியலிலேயே சிந்தனை செலுத்தியதால் தமிழர் தமிழ்நாடு என்றும் சிந்தித்தவரல்லர். இருப் பினும் வடநாட்டில் காங்கிரஸ் மாநாடுகளில் தமிழில் சொற்பொழிவாற்றிய பச்சைத் தமிழர் அவரே. .

தமிழின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் நபர்கள் யாழ்ப்பணத்தில் உலகத் தமிழ்மாநாடு நடத்திய தாக ஜனசக்தி எழுதியிருக்கிறதே! தொழிலாளர்களின் பெயரால் வயிறு வளர்த்துக் கொண்டு, மாஸ்கோவுக்கு மண்டியிடுபவர்கள் கூலிக்கு எழுதிய எழுத்துக்களைச் சட்டைசெய்யத் தேவை யில்லை.

சில அதிகாரிகள் மக்களை மிரட்டுகிறார்களே.. அறியாதவர்கள் நடப்பது மக்கள் அரசு என்ற எண்ணம் இன்னும் உறைக்கவில்லை. காலப்போக்கில் திருந்தி விடு