பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

என்ன? ஏன்? எப்படி?

திருவாரூரில் நடைபெற்ற ஒரு விழாவில் தேவநேயப் பாவாணர் தொகுக்கும் அகராதிக்கு கலைஞர் இரண்டு லட்சம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளார். பாவாணர் என்பவர் யார்? அவர் தொகுக்கும் அகராதி யின் சிறப்பு என்ன?

மறைமலையடிகளாருக்குப் பின் தனித் தமிழ் இயக் கத்தை வளர்த்து வரும் பெருந்தகையாளர் தான் தேவ நேயப் பாவாணர், அடக்கமும் அமைதியும் நிறைந்த இப் பெரியார் தமிழுக்குப் பகையென்றால் சீறும் புலியாக மாறும் உணர்ச்சி மலையாவார். இவர் அகர முதலி என்ற பெயரில் தொகுக்கும் நூலில் தமிழ் வேர்ச் சொற் களின் அமைப்பும் சிறப்பும் அறியலாம். இது தமிழுக்கு ஒர் அருநிதியம் போன்ற நூலாகும். -

இலங்கை உலகத் தமிழ் மாநாட்டில், போலீசார் அக்கிரமம் செய்திருக்கிறார்களே!

சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களை வெறுக்கிறார் கள். இதற்குக் காரணம், தமிழர்கள் எளிதில் அகற்றக்

கூடிய அயல்நாட்டாராக இல்லாமல் சிங்களநாட்டுரிமை

யுடையவர்களாய் இருப்பதுதான். விண்வெறியால் சிங் களவர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துவரும் தீமை களிலே இது ஒரு வகை.

இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவது தவறா? இன்றைய இளைஞர்களின் கையில் எதிர்காலம் இகுக் கிறது. ஆனால், அந்த எதிர் காலத்திற்குத் தங்களைத் தகுதிப் படுத்திக் கொள்ளாமல், தற்கால வெள்ளத்தில் அகப்பட்டு அடித்துச் செல்லப்படுகி றார்களே என திணைக்கும் போது தான் துயரமிகுகின்றது.