பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசியல் 33

.

வேலை நிறுத்தங்களால் பொதுமக்கள் நலம் பாதிக்கப் படுகிறது என்றால், தொழிலாளர்கள், தங்கள் குறையை நீக்க வழி என்ன? பத்துப் பேருடைய உழைப்பில் ஒருவன் கொழுப்பது தவறு என்றால், ஒரு சமுதாயத்தின் துன்பத்தில் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் நன்மையடைவதும் தவறே யாகும். வாழ்வதெனில் முப்பது கோடியும் வாழ்வோம் வீழ்வதெனில் முப்பது கோடியும் வீழ்வோம் என்ற பாரதியின் கருத்தே உண்மையான சோஷலிசமாகும். அரிசனங்களின் பிறப்பு விகிதம் அதிகமானால் என்ன நடக்கும்?

முன்னேறுங் காலத்தின் அளவு நீடிக்கும்.

தமிழ் மக்கள் முன்னேறாததற்கு என்ன காரணம்? எண்ணத்தில் தெளிவில்லாமைதான் காரணம். ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொண்டால், அது வாழ்வுக்கு என்றும் உதவும். ஆனால், பெரும்பாலான தமிழர்கள், இந்தி கற்றுக் கொண்டால் இந்தியா முழுக்க வேலை கிடைக்கும் என்றும், ஆங்கிலம் கற்று கொண்டால், உலகம் முழுக்க வேலை கிடைக்கும் என்றும், எண்ணு கிறார்கள். அடிமைத் தொழிலை அவாவுவோரால் நாட்டின் மிடிமை தீர்க்க முடியாது.

தமிழன், தமிழ் நாடு என்று பேசுவதெல்லாம், பரந்த மனப்பான்மையைக் கெடுத்துவிடும் என்று கருதுகிறேன். பிறரிடம் பழகுவதில்-உறவு கொண்டாடுவதில்சேர்ந்து வாழ்வதில்-பரந்த மனப்பான்மை வேண்டும். உரிமையை விட்டுக் கொடுப்பது பரந்தமனப்பான்மை யாகாது. அது, வடிகட்டிய அடிமைத்தனமேயாகும். அ-3