பக்கம்:என்ன-ஏன்-எப்படி.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

•

என்ன? ஏன்? எப்படி?

அறிஞர் அண்ணாவின் பெருஞ்சிறப்பு என்ன?

அடுக்கிய துன்பங் கோடி தொடுத்து வரினும் அயர்ந்து படுத்திடாது மிடுக்குடன் நடைபோடும் தம்பியரைக் கொடுத்துச் சென்றது அறிஞர் அண்ணாவின் பெருஞ் சிறப்பாகும். ஒற்றுமையும் நாட்டுப் பற்றுங் கொண்ட நல்ல தலைவர்களை உருவாக்கிய அண்ணாவின் சிறப்புக்கு ஈடுமில்லை இணையுமில்லை.

தமிழகம் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்குள் சிறந்த தலைவர்களை யெல்லாம் இழந்து விட்ட தல்லவா?

உண்மைதான். பெருந் தலைவர்கள் பலர் வயது முதிர்ந்து இயற்கை யடைந்து விட்டார்கள். இருப் பினும், நமக்கு தொடர்ந்து நம்பிக்கை யூட்டக் கூடிய தலைவர்கள் இருக்கிறார்கள். பெருந்தலைவர் காமராசர் சிலம்புச் செல்வர், கலைஞர் போன்றவர்கள் தமிழுணர் வும், நாட்டுப் பற்றும் சீர்குலையா வண்ணம் வழி

நடத்திச் செல்ல இருந்து வருகிறார்கள்.

விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல், வேலை நிறுத்தம் இவற்றையெல்லாம் பார்க்கும் போது, வெள்ளைக்காரன் ஆட்சியே மேல் என்று தோன்றுகிறதல்லவா? என்று மடியுமெங்கள் அடிமையில் மோகம் என்று பாரதி யார் பாடினார். சுதந்திர பூமியில் இருந்தும் உங்கள் அடிமை மோகம் போகவில்லையே!

விலைவாசிகள் உயர்ந்து கொண்டே போகின்றனவே! பயப்படத் தேவையில்லை. விலைவாசியுயர உயர நோட்டுப் புழக்கம் தாராளமாகிக் கொண்டு வருகிறது. அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்றால் மிகப் பெரியது, இப்பொழுது சில்லரை நோட்டே அதுதான்.